Wednesday, June 12, 2024

Prayer For All Nations

 MM OCTOBER 2001


Prayer For All Nations:

Master Dang


I pray to God Almighty. You created human beings in one form. You ordered that all people will live as one family. We stand in front of Your holiness and all human beings are under Your shadow. Everybody lives around Your grace and everyone is guided by Your destiny.


I pray to God the Creator. You love everybody. You created each one and gave life to everyone. You give each person the skillful ability and You enable all people to be flooded by Your blessings that is abundant just as the sea.


I pray to God to give the blessing to unite all human beings, to bring harmony to all Religions, to combine all Nations to be one, to help all people to see each other as brothers and sisters in one family and to see this earth as a Country, and bless all people to live in Peace.


I pray to God to start the power to unite all human beings. I pray that You build the Foundation of peace and I ask you to bind all hearts in to one. God the merciful, I ask you fill my heart with the fragrance of Your Love, I ask You to open our eyes with Your divine light, I ask you to' open our ears with Your gentle words, and I ask You to keep us in the fortress of Your destiny.


You are the OMNIPOTENT, who is infinite and eternal. You are the Merciful, You are the Forgiver of the lowliness and weakness of Humanity.


I beg You to hear my prayer. Amen.

மனநோய் யாருக்கு?

 Malarga Manitham - November 2001


உண்மை சம்பவம்

மனநோய் யாருக்கு?

"சிஸ்டர் அம்மா, என் பிள்ளையை பாருங்கள். எதையோ மனதில் வைத்துக் கொண்டு, சாடை, சாடையாக பேசி எங்களை துன்பப் படுத்துகின்றாள். சாப்பிடுவதும் இல்லை, குளிப்பதும் இல்லை. நல்ல துணி உடுத்துவதும் இல்லை. டாக்டரிடம் சென்றால் அவர் உன் மகளுக்கு மனநோய் பிடித்திருக் கின்றது. என்று சொல்லுகின்றார். சிஸ்டர் அம்மா, என் பிள்ளைக்கு மனநோய் இல்லை. யாரோ என் பிள்ளைக்கு, என் குடும்பத்திற்கு ஏதோ செய்து விட்டார்கள். தயவு செய்து உதவி செய்யுங்கள், உங்கள் கரம் வைத்து ஜெபியுங்கள்" என்று மாலை, மாலையாக கண்ணீர் விட்டு என் கரங்களை பற்றினாள் ஒரு தாய்.

"உன் பிள்ளைக்கு மனநோய் வர சான்ஸ் இல்லையே. நான் அன்று, உன்னை உன் பள்ளி பெற்றோர் விழாவில் பார்க்கும் பொழுது நீ தானே அந்த கரும்பலகையில் அழகான வசனத்தை எழுதிக் கொண்டிருந்தாய். அந்த பொன்னான வார்த்தை என் உள்ளத்தில் பதிந்து விட்டதே. The Greatest gift, parents can give

their children is their love. Mother is food, she is love, She is warmth. she is means

To be loved by mother means

To be alive, to be rooted. To be at home.

இவ்வளவு

அழகான வசனத்தை எழுதும் தாயின் மகள் எப்படி மன நோயால் கஷ்டப்பட முடியும்?

"சிஸ்டர் அம்மா!" என்று குழந்தை கத்தியது. இது எல்லாம் பொய், இது Notice Board-க்குத் தான். ஒரு பெற்றோரும் இதை செய்வதில்லை.

Mother is food: இதற்கு என்ன அர்த்தம்? ஏனோ, தானோ என்று சமையல் செய்து பாத்திரத்தில் அடைத்து பள்ளிக்கு கொண்டு போ என்று அனுப்பும் தாய்மார்கள் இவர்கள்.

She is Love: யாருக்கு? இவர்கள் வகுப்பில் படிக்கும் கெட்டிக்கார மாணவிகளை இவர்கள் அன்பு செய்கின்றார்கள்.

She is Warmth: காலையில் 5 மணிவரை இவர்களிடமிருந்து வருவது கோபக் கனல் காற்று. She is earth: சிரிப்பு வருகின்றது.

To be rooted at home : இவர்கள் இருப்பது செங்கற்களால் கட்டி, சிமிண்ட் பூசி, பளிங்கு கல் இட்ட வீடு. வெளியிலிருந்து பார்த்தால் பெரிய வீடு. கண்களை கவரும்; உள்ளே போனால் ஜாமான்களும், துணிமணிகளும் எங்கும் கிடக்கும். குப்பை வீடு இதையா home என்று எழுதினார்கள்? வீட்டில் அன்பு இல்லை. தெய்வம் இல்லை. பக்தியில்லை. பணம்.  இஷ்டம் போல உண்டு. ஆனால் மனம் இல்லை. தான தர்மம் இல்லை.

“அப்பா! கடவுளே! போதும், போதும். செவிகள் வலிக்கின்றன. குழந்தாய். ஆம் தாயே. பெண்கள் படிக்க வேண்டும். ஆனால் என்று, படித்த படிப்பு அவர்களை வேலை செய்து, பணம் சம்பாதிக்க வேண்டு மென்று ஆணாக மாற்றிவிட்டதோ, அன்றே அவர்கள் பெண் அல்ல. வீட்டிற்கு இரண்டு ஆண்கள் உண்டு. கை நிறைய சம்பளம். ஒரு பெண் இல்லையே! பெண் ஆண்களாம். ஆண் பெண்ணாக முடியுமா? அழகாக விழாவிற்கு வருகின்ற பெரியோர் எல்லோரும் பார்க்கும் படியாக Home Virtues என்று எழுதி இருந்தாயே ஞாபகம் இருக்கின்றதா?

The beauty of a home is harmony The security of a home is loyalty The joy of a house is love

The plenty of a house is in children

The rule of a house is in contented spirits

அம்மா! நீ வாழ்ந்து காட்டாததை ஏன் கரும்பலகையில் எழுதினாய்? இன்னும் 10 வருடத்தில் இந்த மாதிரி நிறைய குழந்தைகள் மனநோயால் கஷ்டப் படுவார்கள். அதுவும் முக்கியமாக டீச்சரின் குழந்தைகளாக இருப்பார்கள்".

ஐய்யோ அம்மா! சபிக்காதீர்கள்.

"இதற்குப் பெயர் சாபம் இல்லை. உண்மை. உங்கள் அன்பு எல்லாம், இந்த குழந்தை சொல்லுவதுப் போல கெட்டிக்கார மாணவிகளுக்கு கொடுத்துவிட்டு, காலையில் உன் பிள்ளைகள் பள்ளிக்கும், மாலையில் மற்றொரு

டீச்சரிடம் Tutionக்கும் அனுப்பி விட்டு உன் வீட்டை Hotel ஆக மாற்றி விட்டாயே. பின் உன் குழந்தைக்கு மனநோய் வராமல் என்ன நோய் வரும் என்று நீ எதிர்பார்க்கின்றாய்? உன் தவறை நீ சிந்திக்காமல் யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று பழியும், பாவத்தையும் ஏன் மற்றவர்கள் மீது சுமத்துகின்றீர்கள்?

முதலில் போய் உன் பளிங்கு வீட்டை, குடும்பமாக மாற்று. அது மட்டும் இந்த குழந்தை என்னோடு இருக்கட்டும். என்று, உனக்கு வேலையும் பணமும் பெரியது அல்ல; குழந்தைத் தான் பெரிது என்று நீ நினைக்கின்றாயோ. அன்று வந்து குழந்தையை அழைத்து செல். உண்மையான சொத்து பணமும் பொருளும் அல்ல, அன்பு செல்வங்கள்தான் என்று உணருகின்றாயோ, அன்று இந்த குழந்தையை, நீ அழைத்து செல்... வா! மகளே வா! இந்த ஆஸ்ரமத்தில் அன்பு உண்டு. உன்னை அன்பு செய்கின்ற தெய்வம் உண்டு. நிம்மதி உண்டு. சந்தோஷம் உண்டு. உன்னை பெற்றவர் வரவில்லை என்றாலும் தாயாக நான் உண்டு. என்னோடு உன் வாழ்க்கையை கழித்துக் கொள் என்று சொன்னதும் அந்த குழந்தை ஒடிவந்து என்னை அணைத்துக் கொண்டது.

வேலை செய்யும் தாய்மார்களே! சற்று சிந்தியுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். கரும்பலகையில் எழுதியது போதும். சிந்தித்து செயல்படுங்கள்.

Dr. M. அமலாவதி

Truth

 MM - December, 2005


- Dr.M.Amalvathy
--------------------
Translated in English By. Mr. Arun Kumar

Characters:

The only character that god has given to us is Truth. That is the reason we used to say wherever god is present there will be truth.
Wherever truth exists there god will be present. How come the character called truth emanated from god? How it become the character of
god? From God's thought creation started to appear one by one. God attains the satisfaction. When God said "Everything is complete,
beautifull and satisfied" and it is realized to be true, then the truth emanated.
Thats why we are saying, Wherever truth is god is present and wherever god is present truth exists.... This statement is termed
as Satya (unchangeable) has emanated from God's thought. So, the satya should be in our thoughts.

If we have satya in our thoughts when it comes out, it gets reflected in our words and actions. When it comes out, it emanates truth as the character.
For example, He said the truth, He did the truth, like this all the creations came from God is the truth. when he said the truth that everything is good,
the God, who came from love, created the characters truth and satya.

There are so many characters have been created in the world. Those characters where it has come from and who created it?
When love transforms to action, according to the action, people have named it. For example, when an action comes out after sensing other's troubles/problems,
love works in a secret way.... So, we call it as he is mercifull, he is compassionate. We also call God is mercifull.

Love - when we forgive others for the trouble they have given to us, he has got a big heart, it earns the name as he is a forgiving character.
That is why when we see god, we say forgiving god.

It seems to be many words and many characters. All these are originated from Love only.

In the same way, when Satya(unchangeable) comes into action, we used to say he is a truthfull person. Satya will not fail or die, truth is eternal.
If truth is there in a person's words, he is called a righteous person. He will do whatever he says. He is a responsible person. He has a character of dutifullness.
Like this we can go on saying. For all of this the origin is Satya and truth.

Now a question arises from my mind.... angry person, jealousy person, Betrayer. Like this we used tell about many characters, is it true? then in this case, what is the origin?
Let us think.

Let us say, they are playing songs. And asking everyone to dance. Immediately few people begin to dance. While seeing this, someother people feels to dance. They also join the dancing group
and dance. Few other people themselves could not dance but still they are watching the dance and saying they are enjoying and enjoy. Also they are happy since they are
dancing in their thoughts. Few people they say, do not know to dance and do not know to enjoy the dance and are seated.... What changes they are observing in their emotions?
Keep on enjoying... Waah what a dance he is dancing. The truth is expressed, saying he is a big dancer.... they are seeing the dance also. With that, they are seeing the dancers also.
Wishing them whole heartedly. Expressing the truth, saying that like you i will not be able to dance.

For the people who do not know to dance and enjoy, are hearing others truth. These people do not see the dance and they see the dancer.
Ego of these people with the feeling of pride - says "you do not know to dance like him".

If they change the view towards the dance, these people's emotion would have copied and sent it to mind. Mind would have sent the command to the legs to dance.
But, since these people's views focus on the dancer.... their minds goes towards negative thoughts. Immediately it swings into action and expressed in words.

Sunday, April 7, 2024

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி

ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர் மரத்தடியில் தியானத்தில் இருந்தார். எளிமையான அவரது முகம் தாமரை போல மலர்ந்திருந்தது கண்டதும் அவர் ரதத்தை நிறுத்தினார். கண்களைத் திறந்த அந்த மனிதர், 'என்ன வேண்டும்?' எனக் கேட்டார். "காசியின் மன்னர் நான்! செல்வம் எல்லாம் இருந்தும், ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன். எளிமையாக இருந்தாலும் உங்களின் பிரகாசமான முகம் என்னை ஈர்க்கிறது. சாக முடிவெடுத்த நிலையிலும், உங்களிடம் சற்று நேரம் பேசத் தோன்றுகிறது. அதனால் நின்று விட்டேன்" என்றார் மன்னர். மன்னரின் பேச்சைக் கேட்டாலும், அந்த மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின் கால்களை நோக்கியிருந்தது. மன்னருக்குச் சிறுவயது முதல் கால் களை ஆட்டும் பழக்கம் உண்டு. அந்த மனிதர் தனது கால்களையே பார்க்கிறார் என்பதை அறிந்ததும் சட்டென அசைப்பதை நிறுத்தினார் மன்னர். "மன்னா! எவ்வளவு காலமாக இந்த பழக்கம் உள்ளது?" எனக் கேட்டார் அவர். 'நினைவு தெரிந்த நாள் முதல்..." என்றார். "இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார் அவர். " நீங்கள் என் கால்களையே உற்று கவனித்தீர்கள்" என்றார். "பார்த்தாயா! மற்றவர் உன்னைக் கவனிக்க வேண்டுமென கருதுகிறாய். பிறரைச் சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய். உலகத்தைப் பற்றி கவலைப்படாதே . உன் கால்களை நான் கவனித்ததால், நீண்டநாள் பழக்கத்தைக் கூட நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனி உன்னை நீயே கவனிக்க தொடங்கு. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும்" என்றார். மன்னரின் மனதில் ஒளிக்கீற்று படர்ந்தது. பணிவோடு, "தாங்கள் யார்?" என்று கேட்டார். "புத்தர்" என்றார் அந்த மனிதர் காலில் விழுந்து வணங்கினார். தன்னைத் தானே கவனிப்பதே வாழும் கலை என்பதை அறிந்ததும், மன்னரின் ரதம் அரண்மனை நோக்கி திரும்பியது

கதை கூறும் பாடம்

 கதை கூறும் பாடம் 


ஒரு நாட்டின் மன்னன் நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவி ல் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் 'மந்திரியாரே இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விட வேண்டும் போல் தோன்றுகிறது” என்றான். அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாக வியாபாரம் நன்றாக நடக்கிறதா? என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! 'என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால், யாரும் வாங்குவது தான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! 'இந்த நாட்டின் அரசன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்" என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி. அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கி எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று நீங்கள் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் உங்களுக்கு இதைப் பரிசாக வழங்கினான் என்று கூறி அதை அரசனிடம் தந்தான்! அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்! குரு சிஷ்யர்களைக் கேட்டார் 'சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார். பல சீடர்கள் அதற்கு பலவிதமாக 'கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினார்கள்!! குரு பலமாகத்


தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் 'இல்லை இல்லை கர்மா என்பது நமது


எண்ணங்களே”. நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை


வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறு ஏதேனும் வழியில்


சாதகமாகத் திரும்பி வரும்! நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்

Tuesday, July 18, 2023

HUE INTRO (TAMIL & ENGLISH)

 MEL India (HUE & SY):

வாழ்வை மேம்படுத்தும்

மனித பிரபஞ்ச சக்தியும் ஆன்மீக யோகாவும் (HUMAN UNIVERSAL ENERGY & SPIRITUAL YOGA)

அடிப்படை நிலை அறிமுகம்

நமஸ்தே!

மனிதனை படைக்கும்பொழுது அவனுக்கு அன்பின் முழுமையும் குணப்படுத்தும் ஆற்றலும் கொடுக்கப்பட்டுள்ளது. நமது எண்ணங்கள், பெருமை, உணர்ச்சி, உடல் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஆத்மா வலுவிழந்து போய்விடுகிறது. எதிர்மறை எண்ணங்களும், அன்புக்கு எதிரான செயல்களும் மன்னிக்காமையும், மன அழுத்தமும், பயமும் நமது உடலின் உயிர்சக்தி ஓட்டத்தை தடைப்படச் செய்து உடலையும் மனதையும் செயலிழக்க வைத்து விடுகிறது.

பிரபஞ்ச சக்தியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஆன்மீக உடலின் உயிர் ஓட்டத்தை சரி செய்து நம்மை முழுமைக்குள் கொண்டு வரும்போது, நமக்குள் இருக்கும் குணமளிக்கும் ஆற்றல் வெளிப்பட்டு உள்ளமும் உடலும் சுகப்படுகிறது.

இதற்கான பயிற்சியை மெல் அறக்கட்டளை "மனித பிரபஞ்ச சக்தியும் ஆன்மீக யோகாவும்" அடிப்படை நிலை வகுப்பில் அளிக்கிறது.

அடிப்படை நிலையில் கற்றுக்கொடுக்கப்படுபவை:

1. மூலாதாரத்தின் தூண்டுதலின்றி நேரடியாக மிக எளிய முறையில் சக்தி பரிமாற்றம் மூலம் உடல்
உறுப்புகளுடன் தொடர்புடைய சக்கராக்களை 100% செயற்பட வைத்தல்.

2. எளிய தியானத்தின் மூலம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆத்ம சக்தியை பெருகச் செய்தல்.

3. பிரபஞ்ச ஆற்றல் மூலம் குணமளிக்கும் வல்லமை பெறுதல். அதன்மூலம் தனக்கும் பிறருக்கும் தன்னலமற்ற சேவை செய்தல்.

4. ஆழ்மனதில் தேங்கியிருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனஅழுத்தத்திலிருந்து விடுவித்தல்.

5. இறை அன்பில் முழுமை பெற உதவுதல்.

Improves life

HUMAN UNIVERSAL ENERGY & SPIRITUAL YOGA

Basic level introduction

Namaste!

When man was created he was given the fullness of love and the power to heal. The soul is weakened by the dominance of our thoughts, pride, emotions and body. Negative thoughts, unloving actions, unforgiveness, stress and fear block the flow of life energy in our body and paralyze the body and mind.

When we use the energy of universe power to correct the life flow of the spiritual body and bring us into wholeness, the healing energy within us is unleashed and the soul and body are healed.

Training for this is offered by the Mel Foundation in its basic level class "Human Universal Energy and Spiritual Yoga".

What is taught at the basic level is:

1. The body through the transfer of energy in a very simple way directly without the stimulation of the source
100% activation of the chakras associated with the organs.

2. Unify body, mind and soul through simple meditation and increase spiritual power.

3. Gaining healing powers through Universal energy. thereby rendering selfless service to self and others.

4. Eliminates negative thoughts stored in the subconscious mind and relieves stress.

5. Helping to attain perfection in divine love.

Irudaya Thoodhan 1988

 Our Sister Dr.M.Amalavathy's First article in "Irudaya Thoodhan" magazine on December, 1988...


உள்ளத்தில் இல்லை ஊனம்!

அமலாவதி, கிறிஸ்துநகர்.

பெங்களூரிலேயே மிகச்சிறந்த கிஃப்ட் ஷாப் அது. பரிசுப்பொருட்கள் வாங்க இதைவிட நல்ல கடையே கிடையாது. அங்கே ஏராளமான கிறிஸ் மஸ் பரிசுப் பொருட்கள் பல ரகத்தில், பல விலை யில், பல வண்ணத்தில் வருவோர் போவோரைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தன.

ஏனோ அன்றொருநாள் அவ்வளவு கூட்டமும் இல்லை, வியாபாரமும் சரியில்லை. கடை உரிமை யாளன் வினோத் சோம்பலாய் உட்கார்ந்திருந் தான். திடீரென அவன் கண்களில் ஒரு சிறுமி தென்பட்டாள்.

கண்ணாடியில் தன் மூக்கை வைத்து அழுத்திக் கொண்டு கடையில் உள்ள பொருட்களை ஏக்க துடன் உற்றுப் பார்த்துக் கொணடிருந்தாள். இவனுக்குச் சற்று உற்சாகம் பிறந்தது.

"உள்ளே வாம்மா. உனக்கு என்ன வேணும்?' சிறுமி உள்ளே அடியெடுத்து வைத் தாள். அப்போது வினோத் கவனித்தான். அவ ளுக்குக் கால்களில் ஊனம். இரு சுட்டைகளின் உதவியோடு நடந்து கொண்டிருந்தாள். வினோத்தின் பரிவு இன்னும் அதிகமானது.

"அங்கிள், என் பேரு அனிதா. நானும் என் அக்காவும்தான் வீட்லே இருக்கோம். எனக்கு அம்மா, அப்பா, உறவுஎல்லாம் என் அக்காதான். அவளுக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு வாங்கிக் கொடுக் கலாம்னு வந்தேன்...ஆனா..."என்று இழுத்தாள்.

வினோத்துக்குப் புரிந்துவிட்டது. உற்சாகத்

தோடு கூறினான்: "அனிதா, கண்டிப்பா அக் காவுக்குப் பரிசு கொடுக்கணு ம். உனக்கு எந்தப் பரிசுப் பொருள் புடிக்குதோ அதை எடு'' என்றான்.

கண்களை நாலாப்பக்கமும் சுழலவிட்ட அனி தாவின் கண்கள் ஒரு நெக்லஸ் மீதுபட்டு விலகா

மல் நின்றன. வினோத் அந்த நெக்லஸின் விலை யைக் கவனித்தான். ஆனால் சிறுமி விலையைக் கவனிக்கவில்லை என்பதும் தெரிந்தது. "வெரிகுட் செலெக்ஷன் அனிதா. அது சரி,

எவ்வளவு பணம் வச்சிருக்கே ?''

"ஒவ்வொரு நாளும் உண்டியல்லே நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்ச எல்லாப் பணத்தையும் கொண்டு வந்திருக்கேன். இதோ... என்று கூறி பெருமையோடு தன் கைக்குட்டையை அவிழ்த்து மேசையின் மேல் பணத்தைக் கொட்டி னாள் அனிதா. சில்லறையை எண்ணினான் வினோத். இருந்தன. சரியாக 29 ரூபாய் 50 காசுகள்

நெக்லசை எடுத்தான். விலைச் சீட்டை வெட்டி எடுத்தான். அழகான பரிசுப்பேப்பரில் அதைச் சுற்றினான். மகிழ்ச்சியோடு அனிதா விடம் தந்தான். அனிதாவின் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும்? தத்தித்தத்தி நடந்து வெளியேறினாள். அதுவும் விரைவாக!

அடுத்த நாள் காலை! வேகமாகக் கடைக் குள் நுழைந்தாள் ஒரு பெண். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வார்த்தைகள் துள்ளி விழுந்தன :

இந்த நெக்லஸ் உங்கள் கடையிலிருந்து வாங்கப்பட்டது தானே? இதை யாருக்கு விற்றீர் கள் என்று ஞாபகம் இருக்கிறதா? இதனுடைய உண்மையான விலை என்ன?"

"இதை என் கடையிலிருந்து அனிதா என்ற சிறுமிக்கு நான்தான் விற்றேன். இதன் விலை 350 ரூபாய்.'

"இவ்வளவு பணம் அவளுக்கு இல்லையே.

பின் எப்படி இது அவள் கைக்கு வந்தது?" சிறிது மவுனத்திற்குப் பின் வினோத் கூறினான்:

அனிதாவிடம் இருந்தது ரூ.29–50 காசு தான். ஆனால் அவளைப்போல இதுவரைக்கும் யாரும் என்னிடம் ஒரு பொருளையும் வாங்கியது இல்லை. அவள் ஆசையோடு, தியாகம் செய்து சேர்த்து வைத்திருந்த எல்லாப் பணத்தையும் அன்பாகக் கொடுத்து வாங்கினாள். இது கிறிஸ்மஸ் விழாக்காலம். இத்தனை ஆபரணங் களை விற்கிற எனக்குக் கிறிஸ்மஸ் பரிசு என்று ஒன்று கொடுக்க இந்த உலகத்திலே யாருமே இல்லை. ஆனால் அவளுக்கு ஒரு பரிசு கொடுக்க ஓர் ஆள் இருந்தான். அது தவறா? அந்தப் பரிசையும் அவள் தனக்காகவா வாங்கினாள்? தனக்காக வாழ்நா ளெல்லாம் கஷ்டப்படும் அன்பு அக்காவுக்காக! இந்த அன்புக்கு ஏதம்மா விலை ? தயவுசெய்து எடுத்துக்கொள், உன் தங்கை உனக் களித்த பரிசை?"

வாயாடைத்து நின்ற அந்தப் பெண் நெக்லசுடன் வெளியேறி வாயடை னாள். பின்னாலிருந்து வினோத் கூவினான்: தங்கை அனிதாவை 66 அழைத்துக்கொண்டு கிறிஸ்மஸ் அன்றைக்கு என் வீட்டிற்கு வர மறக்க வேண்டாம்."

Prayer For All Nations

 MM OCTOBER 2001 Prayer For All Nations: Master Dang I pray to God Almighty. You created human beings in one form. You ordered that all peop...