Friday, September 3, 2021

2. நெருங்கிய உறவு

 2. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Oct 2019

நான்: வேலை செய்து, வேலை செய்து போர் அடித்துவிட்டது. கொஞ்சம் வாங்க. ரீலாக்ஸ் "Relax" பண்ணலாம்.

தெய்வம்: கண்ணடிச்சு கூப்பிடுவதை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. *Relax" பண்ணவேண்டுமென்றால் என்ன அர்த்தம்.

நான்: அப்படின்னா, பக்கத்தில் உட்கார வேண்டும். சிரிக்க வேண்டும். செல்லமா கிள்ளவேண்டும், கன்னத்தில் செல்லமாக அடிக்கனும். இப்படி கொஞ்சி விளையாட வேண்டும்.

தெய்வம்: இது ஒன்றும் எனக்கு தெரியாதே

நான்: நான் சொல்லி தருவேன். இப்படி கிள்ளனும். ஐய்யோ கிள்ளமுடியவில்லை. இப்படி செல்லமா அடிக்கனும். ஐய்யோ ஒன்னும் செய்ய முடியவில்லை என்? சிரிச்ச எனக்கு கோபம் வரும்.

தெய்வம்: உன்னை மாதிரி எனக்கு ஒன்றும் உடல் இல்லை. என்னுடைய உடல் ஆன்மீக உடல் அதனால் கிள்ளி, அடிச்சு விளையாட முடியாது. நான்: சரி, நான் மற்றொரு விளையாட்டு சொல்லித்தாரேன்.

அதற்கு பெயர் "கண்ணாமூச்சி” விளையாட்டு நீங்க கண்ண மூடவேண்டும் நான் என் ஆன்மீக உடலில் ஒளிந்து கொள்வேன் நீங்க கண்டு பிடிக்க வேண்டும் சரியா?

தெய்வம்: சரி

நான்: கண்ணை மூடுங்கள். நான் சரி என்று சொல்லுமட்டும் மூடி இருக்கவேண்டும்...... சரி

தெய்வம் : தேடி, தேடி, ஏ கள்ளி வெளியே வா. வயிற்றில் போய் ஒளிந்திருக்கிறாயா? கண்டு பிடித்துவிட்டேன் வெளியே வா.

நான்: திரும்ப கண்ணை மூடுங்கள்.- சரி

தெய்வம்: தேடி, தேடி கடைசியில் ஏ வாடி வெளியே, கிட்னியில் போய் ஒளிந்து நிற்கிறாய். சீக்கிரம் வெளியே வா.
நான் திரும்ப கண்ணை மூடுங்கள்... வா

தெய்வம்: தேடி, தேடி, தேடி... அடி கள்ளி காலுக்கு அடியில் போயா
ஒழிந்திருக்கிறாய். ஓடிவா. இப்பொழுது நீ கண்ணை மூடு நான் ஒளியட்டும்.

நான்: சரி!

தெய்வம்: சரி! வா.

நான்: ஒவ்வொரு உறுப்பாக தேடி கண்டுபிடிக்கவில்லை. அழுகையாக வந்துவிட்டது. ஒளிந்து கொள்கிறேன் என்று ஓடிவிட்டாய். பயங்கர கோபம் வருகிறது வா! சீக்கிரம் வா! இல்லை என்றால் நான் கோபித்து போய் விடுவேன்.

தெய்வம்: ஐய்யோ! போய்விடாதே. நான் உன்னுடன்தான் இருக்கிறேன். ஒரே ஒரு இடத்தை விட்டுவிட்டாய் தேடு.

நான்: அப்படியா! திரும்ப list தேட ஆரம்பித்தேன். ஒரு இடமும் கிடைக்க வில்லை.

தெய்வம்: பொறுமையாக இரு: சரி! ஒரு "குளு" தருகிறேன். புத்தியை வைத்து list போட்டு தேடினால் எப்டி கிடைக்கும். உன் சின்னபிள்ளை தனத்தை விட்டு, விட்டு அழுகையை நிறுத்திவிட்டு, மனதிலும், புத்தியிலும். சமாதானம் கொண்டு வந்து விட்டு, என்னைத்தேடி அப்பொழுது கண்டு பிடிப்பாய்.

நான் : இதயத்தை நன்றாக தேடுவோம். எங்கேயாவது வால்வுக்குள் ஒளிந்திருப்பான். பொறுமையாக தேடியும் ஆள் இல்லை. சரி ஒன்று செய்வோம். இந்த இரத்தத்தில் மிதந்து போவோம் எங்கேயாவது "ஒளி" தெரியும் என்று "Relax" ஆக படுத்து, மிதக்க ஆரம்பித்தேன். படகில் போன மாதிரி இருந்தது. தேடுவதை விட்டு, விட்டு இரசிக்க ஆரம்பித்து விட்டேன். சந்தோஷமாக இருந்தது. நன்றாக சுற்றி, சுற்றி வந்தேன். திடீரென்று ஒரு 'ஒலி' கேட்டது. எவ்வளவு நேரம் தான் ஒளிந்திருப்பது. என்ன செய்கிறாய்" என்று பின்தேட ஆரம்பித்தேன். கடைசியில் பார்ந்த புத்தியிலே, ஒரு மூளையில் ஒரு ஒளி தெரிந்தது. பார்த்து விட்டேன். வெளியே வா....

தெய்வம்: இந்த விளையாட்டு வேண்டாம். நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா. உன் புத்தி எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. புத்தியில் அமைதியின்றி என்னால் அங்கு இருக்கவே முடியவில்லை. உள்ளத்தை அமைதிபடுத்துவது எளிது. புத்தியை அமைதிபடுத்து. அப்பொழுது தானே என் 'அப்பா' அங்கே வந்து தங்க முடியும். இப்படி மூளை" வேலை பார்த்தால் என் அப்பா சொல்வது
எப்படி கேட்கும். எங்க அப்பா ஒன்றும் என்னை மாதிரி தங்கி காத்திருக்க மாட்டாங்க. ஓடி போய்விடுவார்கள். நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

நான்: 'சாரி' கோபமா, சிந்திக்க தானே புத்தி கொடுத்தீர்கள். அதனால் நான் சிந்தித்து வேலை செய்கிறேன். அதுக்கு போய் கோபப்பட்டால், நான் என்ன செய்வேன்.

தெய்வம்: எங்க அப்பா, திட்டம் போட்டு எப்படி செய்யவேண்டுமென்ற திட்டமெல்லாம் புத்திக்கு தெரியும். நீ அமைதியாக, உன் சிந்தனையை கொண்டு வராமலிருந்தால் எங்கள் சிந்தனை உனக்கு தெரியும்

நான்: அப்படினா நான் என்ன செய்ய வேண்டும்.

தெய்வம்: தினமும் காலையில் அமைதியாக இருந்து, உன் கவனத்தை சுவாசத்தில் வைத்து சுவாசம் எடு. என்னுடைய ஒவ்வொரு சுவாசத்திலும் தெய்வம் உள்ளே வருகிறது ஒன்று மட்டும் உன் சிந்தனையில் வைத்து விட்டு, சுவாசம் எடு. அப்பொழுது என் தந்தை உன் புத்தியில் தங்கி அன்று முழுவதும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டுமென்று. அவர் சொல்லித் தருவார். அப்படியே செய். நீ குருக்கே உன் சிந்தயை கொண்டு வந்தால், அவர் பேசமாட்டார். மௌனம் சாதிப்பார்.

நான்: அப்பாவிடம் உறவு வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். நமக்குள்ளே அடிக்கலாம், சண்டைபோடலாம். அப்பாவிடம் என்ன செய்ய முடியும். சமமாக இருக்க முடியாதே.

தெய்வம்: உன் 'சுதந்திரத்தை' கொடுத்து விட்டாயே! பின் ஏது உனக்கு சுதந்திரம்.

நான்: நான் ஒரு அடிமையாகி விட்டேனா?

தெய்வம்: ஒரு வகையில் உண்மை தான். நாம் எல்லோரும் அவளால் படைக்கப்பட்டதால் நாம் அடிமை கூடாது தானே, அடிமை என்ற எதிர்மறை சிந்தனை இருக்கக் என்பதற்காக தான் 'freedom of choice' கொடுத்தார். நீ மறுபடியும் என்னோடு சேரும்மட்டும், எத்தனை பிறவி எடுத்தாலும் சரி. உனக்காக பொறுமையாக காத்திருப்பேன் என்று கூறி காத்திருக்கிறார். ஆனால் நீங்கள் ஏன் மனிதனுக்கு "சுதந்திரம்" கொடுத்தாய் அதனால் தான் நாங்கள் கெட்டுபோகிறோம். வழி தவறி செல்லுகிறோம். கொடுத்தது தப்பு என்று சொல்லுகிறீர்கள். நீயே உன் சுதந்திரத்தை, சுதந்திரமாக கொடுத்து விட்டு. இப்பொழுது கேட்கிறாய். நான் அடிமையா என்று மக்களை வைத்து என்ன செய்வது?

நான்: சாரி! உலகத்தில் வாழ்ந்து என்னை பல பேர் அடிமைப்படுத்தி, அடிமையான உணர்வு வந்ததால் இப்படி கேட்டு விட்டேன். இந்த உணர்ச்சி என்னுடைய "தனித்தன்மை” இருக்கும் மட்டும், திடீரென்று அது தலைகாட்டும். அப்பாவிடம் இந்த உணர்ச்சியை 'serious' ஆக எடுக்க வேண்டாம். என்று கூறிவிடுங்கள். நான் குழந்தை தானே. கொஞ்சம் கிறுக்கு போல பேசுவேன். கோபப்பட வேண்டாம் என்று எனக்காக நீங்கள் பரிந்து பேசுங்கள்.
மறுபடியும் சந்தோஷமாக எனக்கு கொடுத்த சுதந்திரத்தை என் தந்தையின் கையில் கொடுக்கின்றேன். அவர் “என் எஜமான், நான் அவரது வேலைக்காரி" சரியா! சந்தோஷமா, bye love

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...