Friday, September 3, 2021

4. நெருங்கிய உறவு

 4. நெருங்கிய உறவு

- Dr.M.அமலாவதி
Malarga Manitham Magazine - Dec 2019

தெய்வம்: என்ன முகம் கோபமாக தெரிகிறது. என்ன நடந்தது,
நான்: தெரியாதது போல் ஏன் நடிக்கிறீர்கள்

தெய்வம்: நானா? நடிப்பு என்றால் என்ன அர்த்தம்

நான் : ஏன் கோபத்தை உண்டாக்குகிறீர்கள். 8 மணிக்கு வா என்று சொல்லிவிட்டு இவ்வளவு நேரம் பிந்திவந்தால் கோபம் வராதா? என்ன?

தெய்வம்: ஓ! இதுக்கா கோபம் "காத்திருப்பது" "Waiting" அர்த்தம் தெரியுமா?

நான்: தெரியாது

தெய்வம்: காத்திருப்பது உன் அன்பை
வெளிப்படுத்துவது என்று அர்த்தம்

நான்: ஆஹா! அப்புறம் அரசியல் மீடிங்குக்கு போகும் பொழுது அல்லது பட்டம், பதவி வாங்க போகும் பொழுது, வரவேண்டிய ஆள், வர தமதித்தால் என்ன செய்வீர்கள்? வந்ததும் ஒரு சந்தோஷம் வரும். அப்பொழுது காத்திருந்த கோபம்
எல்லாம் மாறிவிடும் அப்படித்தானே. எனக்காக காத்திருந்தால் என்னை பார்த்த உடன் கோபம் மாறி சந்தோஷம் வேண்டுமல்லவா. ஏன் கோபம் தீரவில்லை என்றுத் தான் நான் யோசிக்கிறேன்.

நான்: அரசியல்வாதியும், நீங்களும் என்றுத்தானே எனக்கு அவர்கள் மீது நட்பு உண்டா? இல்லை அவர்கள் என்மீது நட்பு வைத்திருக்கிறார்களா?

தெய்வம்: ஒ புரியுது "நட்பு" இருப்பதால் கோபம் வருகிறது என்று சொல்ல வருகிறாயா? காத்திருக்கும் பொழுது கோபம் வரும் பார்த்த உடன் 'நட்பு' அல்லவா வரவேண்டும். வந்த உடன் ஓடி கட்டி அணைக்க வேண்டாமா. முகத்தை தூக்கி வைத்திருக்கிறாய்?ஏன்? அல்லவா

நான்: உன்னை சொல்லி புரிய வைக்க முடியாது நான் ஒன்று கேட்கட்டா நீங்கள் எனக்காக காத்திருந்து நான் பிந்தி வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்

தெய்வம்: இன்னும் இரண்டு பேரை சந்தித்து விட்டு பிந்தி வருவேன்.
எனக்கு தான் உன் சிந்தனை தெரியுமே.

நான்: இதுதான் வித்தியாசம். எனக்கு உங்கள் சிந்தனையை தெரிந்து -கொள்ள முடியவில்லை. நான் என் சிந்தைனயிலேயே இருக்கிறேன். அதுதான் கோபத்தை உருவாக்கி தருகிறது. காரணம் புரிந்தது.

தெய்வம்:மற்றொரு விஷயமும் இதில் உண்டு. ஏன் காத்திருக்கிறாய். வரவில்லை என்றால் போக வேண்டியது தானே. நான் இருக்க சொல்லவோ, காத்திரு என்று சொல். இல்லையே ஏன் காத்திருக்கின்றேன் என்று நீயே உன்னை கேள்?

நான்: நான் உன்னை அன்பு செய்வதால் பார்த்துவிட்டு போகவேண்டுமென்ற ஆர்வத்தால் மனம் காத்திருக்க சொல்லுகிறது, அதனால் காத்திருக்கிறேன்.

'தெய்வம்: அன்பு கொஞ்சமிருந்தால், கொஞ்சநேரம் காத்திருப்பாய். அன்பு அதிகம் உண்டு என்றால் அதிகநேரம் காத்திருப்பாய் அப்படித்தானே. பின் ஏன் பார்த்தஉடன் சந்தோஷத்தில் வந்து கட்டிபிடிக்காமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உன் கோபத்தை காட்டுகிறாய்.

நான்: தெரியவில்லை. பார்த்த உடன் கோபம் தான் வந்தது.

(தெய்வம்: நான் சொல்லி ருகிறேன். அது ஒரு "Emotional game"

நான்: அப்படிஎன்றால் தெய்வம்: நீ கோபத்தை காட்டினால் உன்பின்
வருவேன் கொஞ்சம், கொஞ்சுவேன். இல்லையென்றால் பழிவாங்கும் எண்ணம் நீ என்னை காக்க வைத்ததுப் போல நானும் உன்னை காக்கவைப்பேன், என்று

நான்: எனக்கு ரொம்ப கோபம் வருகிறது. நான் ஒருநாளும் யாரையும் பழிவாங்கமாட்டேன். என்று உங்களுக்கு தெரியாதா? போதும் பேசமாட்டேன்.

தெய்வம்: இதற்கு பெயர் "Emotional game" நான் சொல்லுகிறேன் ஒரு கேள். கதை ஒரு இளைனுக்கு என்னை அதிகம் பிடித்திருந்தது. அழகாக இருப்பான். ல்ல படிப்பு, நல்ல வேளை அவனுக்கு "நாய்" என்றால் உயிர். ஒருநாள் நான் கேட்டேன், "டாம் எல்லோரும் உன்வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும். என்று என்னிடம் கேட்டார்கள். ஏன் நீ என்னிடம் கேட்கவில்லை என்று கேட்டேன் அதற்கு அவன் இந்த பெண்களை சமாளிக்க எனக்கு தெரியாது. அவர்கள் மனநிலை காற்று அடிப்பதுப் போல அடித்துக் கொண்டே இருக்கும். அவர்களை சந்தோஷமாக வைக்க முடியாது அதனால் தான் நான் கேட்கவில்லை. நிம்மதியாக
சந்தோஷமாக இருக்கின்றேன். என்றான். தப்பு மனிதன் துணை கேட்டதினால் தான் நான் பெண்ணை உருவாக்கினேன். நீ நாயை துணைக்கு வைத்திருக்கிறாய். அது தப்பு. திருமணம் செய்ய வேண்டுமென்று கூறினேன். அப்படிஎன்றால் ஒரு பெண் தா என்றான். திருமணம் முடிந்தது. சில மாதங்கள் கடந்தன. என்னை பார்க்க வந்த பொழுது கிண்டலாக கேட்டேன். என்ன திருமண வாழ்வு எப்படி இருக்கிறது. என்னை கூட சில நேரம் மறந்து விட்டாயே என்றேன். அதற்கு அவன் கூறினான். ஆறுமாதம் முடிந்து விட்டது அப்படி இருந்தும். இவள் இப்படித்தான் என்று சொன்னான் வரையறுக்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக. நான் சற்று பிந்தி வந்தால் என்னுடைய "Ben" உர்... உர்... என்று சுற்றி, சுற்றி வரும். என் கார் சப்தம் கேட்ட உடன் வாலை ஆட்ட துடங்கும். உள்ளே போன உடன் என் மேல் குதிக்கும், முத்தும் அதுதான் அன்பை பயங்கரமாக வெளியே காட்டும். சரி! சரி ! என்று அதை சமாதான படுத்துவேன். அந்த பக்கம் திரும்பி பார்த்தால் நீங்கள் கொடுத்த மனைவி முகத்தை ஊர், ஊர் என்று வைத்து முகத்தில் நீளமும் அகலமும் கூடி கொண்டே போகும். இதுதான் என் திருமண வாழ்க்கையின் சுருக்கம். நாய்க்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசம். இதை உண்மையா என்று அறிய உன்னிடம் செய்து பார்த்தேன். டாம் கூறியது உண்மைத் தான்.
போதும், போதும் நான் நான்: போதும், போய்விட்டு வருகின்றேன். ஏன் இந்த மாதிரி மனநிலையை பெண்ணுக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று சற்று நீங்கள் யோசித்து விட்டு வாருங்கள். போயிட்டு வரேன் Bye ஏ... வா... ஏ... வா....' Bye, Bye.

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...